இங்கு இல்லாவிடில் அங்கு..! அங்கு இல்லாவிடில் இங்கு..! அடடே.. இவன் சரியில்லை. அடடே அவன் சரியில்லை..! என்று பொலம்பி பொலம்பி செக்கு மாடு போல இருவரை மட்டுமே சுத்தி வந்த தமிழக அரசியலில் நார பொழப்பு யாருக்கு என்றால் அடித்து சொல்லுவேன் அது தமிழக மக்களுக்கு தான்.
தவளை தன் வாயால் கெடும்..! யானை தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொள்ளும். சரி...! தமிழன் என்ன செய்வான்..? தேர்தல் வரும் சமயத்தில் தன்னையே ஒரு ராஜாவாக கருதிக்கொண்டு. நேர்மை, கண்ணியம் என்று தன்னை தானே பெருமையாக எண்ணிக்கொண்டு-சரியான நேரத்தில், மிகச்சரியாக ஒரு தவறை செய்துவிடுவான். அதுதான்-பிரதிநிதியை சிறப்பாக தேர்ந்தெடுத்திடுவான்.
வயதானவருக்கு அவர் இஷ்ட கட்சியையும் தலைவனையும் விட மனசில்லை. நடுத்தர வயதினருக்கு எந்த கட்சிக்கும் விருப்பமில்லை அதனால் தேர்தல் நாளும் அவனுக்கு ஒரு சாதாரண நாளே..! இளங்கன்றுகளுக்கு எப்போதுமே அப்போதையே ஆட்சிமுறை புடிக்காது. எனவே எதிர்கட்சிக்கு தான் ஓட்டு. இப்படியே போய்கொண்டு இருந்தால். ஊர் உலகத்தில் சொல்வதற்கென்று ஒண்ணுமில்லாமல் போய்விடும்.
ஒன்று ஆளுமை-மற்றொன்று எதிர்மை. இவை இரண்டையும் கடந்து இன்னொன்று பிறக்குமா என்பது தெரியவில்லை. பிறந்தாலும் அவை எந்த பாதைக்கு அழைத்து செல்லும் என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை.
இப்போது தமிழக ப்ரச்சனைகள் என்று குமுறிக்கொண்டிருக்கும் வயதானவர்களே...! உங்க இஷ்ட கட்சியும் தலைவியும் தானே சாதித்துக்கொண்டிருக்கிறார்கள். இங்கு அழுது புலம்ப கூடாது. துடைத்துக்கொள்ளுங்கள். அட.. அதுதான்.. அந்த ஓரமாக ஒழுகிறதே அந்த கண்ணீரை துடைத்துக்கொள்ளுங்கள்.
அட.. அங்கு யாரு காச்சு மூச்சென்று கத்திக்கொண்டிருப்பது. ஓ.. ஓட்டுபோட உத்தமர்களோ.! உங்களுக்கு யார் உரிமை கொடுத்தார் கத்துவதற்கு. எப்போது ஓட்டுபோடுவதை விட்டுவிட்டீர்களோ அப்போதே நீங்கள் இந்தியன்-தமிழன் என்னும் அருகதையை பெற தகுதி அற்றீர்கள். எனவே தமிழகத்தில் நடக்கும் கோரங்களை கண்டு வாயை பொத்திக்கொண்டு போங்கள். உங்களுக்கு இதை எதிர்த்து கேட்க ஒரு துளி உரிமை கூட கொடுக்கப்படவில்லை. நீங்கள் ஓட்டுபோடாதது கூட இந்த அவதிக்கு ஒரு காரணம் என்று சொல்லிட முடியும். எனவே, நீங்கள் செய்த தவறுக்கு நாங்கள் அனுபவிக்குறோம். பொத்திக்கொண்டு வேலையை பாருங்கள்-தாம் தூம் என்று கத்தாமல்.
அந்த முக்குல வியாக்கானம் பேசுற இளசுகளே..! இவன் சரியில்ல.. அவன்.. அவன் சரியில்ல இவன்.. இப்படி சொல்லியே தமிழகத்துல 30 வருசம் இருண்டுபோச்சு. புதுசா வர்ற நீங்களாவது கொஞ்சம் யோசிக்கணும். யோசிக்காம மாற்றம் வரணும்னு நினைக்காம கண்மூடி தனமா கேவலமா நடத்துகிட்டு இப்ப என்ன பேச்சு வேண்டி கெடக்கு.
ஆக மொத்தம்.. நடக்குற எல்லாத்துக்கும் நாம தான் காரணம். இனிமே எவனாச்சும் எவனயாச்சும் திட்டுனீங்க.. பண்ணுணீங்கல அனுபவிங்க.!!
.
.
.
''டே டே... பதிவு போடுறேன்ல.. எவன்டா கரண்ட கட் பண்ணினது... அவன.. *%&$&&$&**&$*&%&%&@$@$#@#%$%$&''
வாழ்க்கைய எண்ணி எண்ணி சிரிக்கிற போல ஆகிடுச்சே.............!
---
ஷோ.ரா.

