Saturday, 9 June 2012

Bio-Weapon Marrisson(பகுதி-1)

"இஸ்தாபுல் எங்க? இஸ்தாபுல்.... Call him immediately.. அந்த கனெக்டர் எங்க? நேரம் கடக்குது.. " என்று கத்திக்கொண்டிருந்தார் மேரிசன்.

காலை நேரத்தில் அடிவயிற்றில் உண்டான வேதியல் மாற்றத்தால் கழிவறையில் தஞ்சம் புகுந்திருந்த இஸ்தாபுல் அவசர அவசரமாக பேண்டை பாதி மாட்டியும் மாட்டாமல் நொண்டிக்கொண்டே மேரிசனை நோக்கி ஓடி வந்தான். அவனை கண்டதும் மேரிசன்,

''இஸ்தாபுல்.. கனெக்டர் எங்கே...? Give me soon..."

''கனெக்ட்... கனெக்ட்.. எந்த கனெக்டர் சார்...?''

'ச்சோ... அச்சச்சோ... கனெக்டர் மறந்துடுச்சா சார்க்கு... ஹே இடியட்... தி டீஹைட்ரேடிங் கனெக்டர்...''

''அது... அது...............''

''வாட்.. என்னயா... அதையும் க்ககூஸ்ல போட்டுட்டியா? அங்க போட வேண்டியத மட்டும் போட வேண்டியது தானே...''

''ஆங்.. அத அந்த டேபில் ட்ராயர்ல தான் வச்சிருக்கேன்...''

''ஓ... ஹவ் ஸ்வீட் யு ஆர்... இப்ப நான் போயி அத எடுத்து கனெக்ட் பண்ணவா? அதுக்கு தான் உனக்கு சம்பளம் குடுத்து உக்கார வச்சிருக்கேனா? இடியட்.. போய் கனெக்ட் பண்ணு...'' என்று இஸ்தாபுலிடம் சொல்லிவிட்டு கிச்சனுக்குள் போனார்.

உள்ளே சென்று ஒரு பட்டனை தட்டியதும் ஒரு Chair மேரிசன் நின்ற இடத்திற்கு வந்தது. அதில் அமர்ந்துகொண்டார். மிகவும் சுவையான கோனா பியாபெர்ரி காபி ஒரு பெரிய ஜக்கில் அவர் கையில் வந்தது. விஞ்ஞானமும் ஒரு மந்திரமே... விஞ்ஞானிகள் ஒரு மந்திரவாதியே என்று மேரிசனின் தந்தை அவரிடம் அடிக்கடி சொல்வார். விஞ்ஞானியாகிறேன் புதிதாக கண்டுபிடிக்கிறேன் என்று மேரிசன் திரிவது அவரின் தந்தைக்கு சிறிது வருத்தமே. வீட்டை கவனிக்கவில்லை என.

''மந்திரவாதினா பரவால.... நான் சாமியார் இல்லயே...'' என்று மேரிசன் கிண்டலாக சொல்ல, இருவரும் சிரித்துவிட்டு பின்னர் வேலையை பார்ப்பர்.

காபியை குடித்துக்கொண்டே பழையதை நினைத்து புன்னகைத்து கொண்டிருந்தார் மேரிசன். திடீரென்று 'டொம்..' என சத்தம் கேட்டது. திடீரென கேட்ட சத்தத்தால் பரபரவென்று கிச்சனை விட்டு வெளியே வந்தார் மேரிசன்.
அங்கே இஸ்தாபுல் திரு திருவென விழித்துக்கொண்டிருந்தான்.

''என்ன.. என்ன.. என்னயா பண்ணின...''

''அது.... அது.... டீஹைட்ரேடிங் கனெக்டர என் சூட்டோட கனெக்ட் பண்ணி பாத்தேன்... இழுத்துடுச்சு...''

''நான் ஒண்ணு கேட்டா தப்பா நினைக்கமாட்டியே இஸ்தாபுல்?''

''எஸ் சார்... நீங்க கேட்டா சொல்லவேண்டியது என் கடமை சார்....'' என்று முறுக்கிகொண்டு நேராக பார்த்து மிலிட்டரி ஆபிஸர் போல நின்றான் இஸ்தாபுல்.

''நான் கேக்க நினச்சது என்னனா.. குறை மாசத்துல பொறந்தவனா நீ??''

''சார்....''

''சட் அப்... யு ப்ளட்டி... என்ன மேன் நினச்சுட்டு இருக்க.. என் மொத்த சொத்தும் இந்த ப்ராஜெக்ட் தான்... இடியாடிக் வேலையெல்லாம் பண்ணாத இங்க...''

''சாரி சார்... பட் நானும் 5 வருசமா உங்க கூட இருக்கேன்... என்ன பண்றீங்கனே புரியல கொஞ்சம் விளக்க முடியுமா...?''

''அப்பா... 5 வருசமா நீயும் கேப்பனு தான்யா வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.... 5 வருசமா என்ன பண்றோம்னு தெரியாம நீயும் பண்ணிட்டு இருந்திருக்க...''

ஈ.. என்று பல்லை இளித்தவாறு நின்றவனை இழுத்து ஒரு கண்ணாடி பெட்டிக்குள் இருக்கும் குரங்கை காண்பித்து.

''இது மேடிசன். இந்த மேரிசன்னோட தம்பி போல. இவன் தான் என்னோட எல்லாம். இந்த கண்ணாடி டம்பளர் உள்ள விதவிதமான இன்சக்ட்ஸ் இருக்கு. குரங்கு வாயிலிருந்து வர்ற காத்துல கன்டாமினேடட்.. அதாவது அசுத்தமான ஆக்ஸிஜன் இருக்கும்.. ஆக்ஸிஜனே சுத்திகரிக்கப்பட்ட காற்று தானே... அது என்ன அசுத்தமான ஆக்ஸிஜன். அப்ப அது ஆக்ஸிஜனே இல்ல. பட்.. அந்த காத்து இன்சக்ட்ஸ் கூட பரவும்போது தே கேன் சர்வைவ்... பட் சேம் திங்... உடம்புல வாட்டர் கன்டன்ட்ஸ் இல்லாம பரவுற ஆக்ஸிஜன் ஒரு விசமா ஆகலாம்....''

''அது எப்படி... எனக்கென்ன ஒண்ணுமே தெரியாதா?''

''யோவ்.. இருயா... முழுசா கேளு... குரங்குங்க என்ன விரும்பி சாப்பிடும்...? வாழைப்பழம்... அந்த வாழைப்பழத்துல அதிகமா மாய்ஸ்டர்.. அதாவது ஈரப்பதம் இருக்கும்.. அதுல இருந்து கேரோடீன், ஃபுட் எனர்ஜி, கார்போஹைட்ரேட் அதிகமா கிடைக்கும்னுலாம் எல்லாருக்கும் தெரியும். பட் இத தாண்டி ஒரு கன்டன்ட் அதிகமா கிடைக்கும்..  அது ஆஸ்கார்பிக் ஆஸிட்... அந்த ஆஸ்கார்பிக் ஆஸிட் அதிகமான அது ஆக்ஸிஜனுக்கு எதிரான காற்றை உள்ளுக்குள்ள உருவாக்கும்... ஒண்ணு இல்லாத இடத்துல அத எதிர்க்குற சக்தி அதிகமான என்ன ஆகும்? எஸ் எஸ்... வரட்சி... உடம்புல வரட்சி வரும்போது அதுக்காக சாப்பிடுற அத்தனையும் வரட்சியே உண்டாக்கிட்டு இருந்தா என்ன ஆகும்?''

''என்ன சார் ஆகும்???''

''ஆமாம் யா.. உனக்கு எதுவுமே புரிஞ்சிருக்காதுனு இதுவரைக்கும் சொன்னதே பெரிய விசயம்.. இதுக்கு மேல சொல்லி உனக்கு எதனா புரிஞ்சுப்போச்சுனா நீ எனக்கே ஆப்பு வச்சிடுவ...''

''சே... என்ன சார்.. நான் அப்படிபட்டவன் இல்லசார்... சரி... நீங்க சொன்னதெல்லாம் குரங்குகிட்ட பண்ணபோறீங்கனு புரியுது.. பட்.. இந்த பாட்டில்ல இருக்குற இன்சக்ட்ஸ்லாம்..??''

''இவுங்கலாம் நமக்காக உயிர்தியாகம் பண்ண போறவங்க....''

''ஓ... குரங்க வச்சு... அதோட மூச்ச இந்த இன்சக்ட்டுக்கெல்லாம் விஷவாயுவா யூஸ் பண்ண போறீங்க.... அப்படிதானே...??''

''அடடா.. புரிஞ்சிடுச்சா.. இன்னைக்கே அத எச்சில் தொட்டு அழிச்சிடு...'' என்று மேரிசன் சொன்ன அடுத்த நிமிடம் தலையை சொரிந்துகொண்டு சிரித்தான் இஸ்தாபுல்.

---

பின்பு ஒருநாள்...

இருக்கையில் அமர்ந்தவாறு உரங்கிகொண்டிருந்தான் இஸ்தாபுல். உள்ளிருந்து ஒரு சப்தம்..

''காட் இட்... ஐ காட் இட்...'' என்று.. திடுக்கிட்டு எழுந்தான் இஸ்தாபுல். அய்யோ.. எதுவோ ஆயிடுச்சு போலவே.. ஒருவேலை போயிருப்பாரோ.... நாம எப்படி அடுத்து இந்த லேப் முழுசுக்கும் தலைமை ஏத்துகிறது என்று மனதினுள்ளே யோசித்துகொண்டு உள்ளே சென்றான். அங்கே ஆழ்ந்த மகிழ்ச்சியில் மேரிசன் நின்றுகொண்டிருந்தார்.

இஸ்தாபுல் உள்ளே வருவதை கண்டதும் ஓடிவந்து இஸ்தாபுலை கட்டி அணைத்து உதட்டோடு உதட்டில் முத்தம் கொடுத்துவிட்டார். சடாரென்று தள்ளிவிட்டு.. எச்சிலை துப்பிக்கொண்டே இஸ்தாபுல்..

''யோவ்.. பெரிய மனுசன்னு மதிப்பு கொடுத்தா.. என்ன காரியம்.. து.. து.. உவ்வே... பினாயில் ஊத்தி கழுவனும்.. து.. து..''

''டே... நான் கண்டுபுடிச்சுட்டன்... மேடிசன் மூச்சுகாத்து போனதும் அந்த பாட்டில்ல இருந்த இன்சக்ட்ஸ் எல்லாம் செத்துபோச்சுடா..''

''இங்க என் வாழ்க்கையே போச்சே... என் லவ்வர கூட நான் இதுவரைக்கும் உதட்டுல... அய்யோ...''

''இத்தன நாளா... என் உழைப்புக்கெல்லாம்... சூப்பர்டா... நாம சாதிச்சுட்டோம்...'' என்று ஒருபுரம் மேரிசன் கத்திக்கொண்டிருக்க. நாற்காலியில் ஒற்றை காலை வைத்து ஒரு காலை தொங்கலில் விட்டு தலையில் கையை வைத்துக்கொண்டு மறுகையால் உதட்டை தடவிக்கொண்டே...

''போச்சு... எல்லாம் போச்சு... போயும் போயும் என் கற்ப ஒரு ஆம்பளைகிட்டயா இழக்கணும்.... போச்சு...'' என்று புலம்புகொண்டிருந்தான் இஸ்தாபுல்.

ஆனால் இந்நேரத்தில் அந்த மேடிசன் குரங்கு இறந்துபோயி கிடந்தது. அதை கண்ட மேரிசன்,,

''அய்யோ.. நான் ஒண்ணுமே பண்ணலையே... பயோ வெப்பனா யூஸ் பண்ற ஒண்ணு ஒருமுறைக்கு மேல யூஸ் பண்ண முடியாம இறந்துபோனா.. அய்யோ அது கண்டுபிடிப்பே இல்லயே... என்ன பண்ணினேன்... டீஹைட்ரேட் பண்ணினேன்.. வாழைபழத்துல இருக்குற ஈரபதம்.. வாட்டர் கன்டன்ட்ஸ்லாம் ரிமூவ் பண்ணிட்டு சாப்பிட கொடுத்தேன்... இது எந்த சைடு எஃபெக்ட்ஸூம் இல்லாம இருக்கானு பாக்கதானே இத்தன காலம் ஓடுச்சு.. இது எப்படி..?'' என்று தனக்குள்ளயே யோசித்துக்கொண்டு குழம்பிபோயிருந்தார். ஆனால் அந்த பக்கம் இஸ்தாபுல், கன்னத்தில் கை வைத்து விட்டத்தை பார்த்து.. மெது மெதுவாக..

''போச்சு.. எல்லாமே.. எல்லாமே போச்சு..'' என்று புலம்பிகொண்டிருக்க...

''எஸ்.. எஸ்... உடம்புல ஆக்ஸிஜன் கன்டன்ட்ஸ் கம்மியானா அது சொந்த உடம்பையும் தானே அழிச்சிடும். இத எப்படி நான் யோசிக்காம போனேன்... எஸ்... ஆக்ஸிஜன் ஏத்தி ஏத்தி அத டீஹைட்ரேட் பண்ணனும்...'' என்று யோசித்துக்கொண்டே இஸ்தாபுலிடம் வந்தார்.

''இஸ்தாபுல்.. இஸ்தாபுல்...'' என்று அழைக்க.. இஸ்தாபுலோ விட்டத்தை பார்த்துக்கொண்டே,

''ம்ம்.. ம்ம்... எல்லாமே போச்சு..'' என்றான்.

''டே... கவர்மன்ட் அப்ரூவல் அண்ட் யூசேஜ்காக டெமோ அரேஞ்ச் பண்ணிருக்கேன்டா.. இனிமே ஒரு விலங்க வாங்கி ட்ரெயின் பண்ண முடியாதுடா... இதுவரை கூட இருந்த உன்னையே டெமோக்கு யூஸ் பண்ணிக்கவா?''

''ம்ம்... வாழ்க்கையே போச்சு... இதுக்குமேல எதுக்கு யூஸ் பண்ணினா என்ன?''

''மேடிசன் இறந்துட்டானே உனக்கு பயம் இல்லயா? நான் பாத்துகுறேன் டா.. மாத்து மருந்து உருவாக்கிடுவேன்.''

''ம்ம்.. எனக்கு பயம் இல்ல...''

''தேங்க்ஸ்டா.....'' என்று மீண்டும் அணைக்க அருகில் வந்தார் மேரிசன்.

''யோவ்... மரியாதையா போயிடு... வேற எதனா அசிங்கமா சொல்லிட போறேன்...'' என்று இஸ்தாபுல் மிரட்ட... அவர் எண்ணம் நிறைவேறிய சந்தோச மகிழ்ச்சியில் சுத்தி ஓடிக்கொண்டிருந்தார்.

''உண்மை தெரியாம பயப்புள்ள எப்படி நிக்குது பாரு...'' என்று முணுமுணுத்துக்கொண்டே ஓரமாக சிரித்துக்கொண்டான் இஸ்தாபுல்.

---

(தொடரும்)