"எலே.. கருவட்டியாம்புள... கருவட்டியாம்புள... எந்திருயம்ல... ராவுல கண்ண மூடிகிட்டு உறங்குராப்புல நடிக்காதம்ல.. ரவைக்கு மாமன் வர்ணம்னுச்சுல.. எந்திருயம்ல...''
தூங்குவது போல பாசாங்கு செய்து கொண்டிருந்த கருவட்டியாம்பளையை தட்டி எழும்ப செய்ய முயற்சித்து கொண்டிருந்தாள் சின்னதயிரியாள்.
''உறங்கிப்புட்டவன எழுக்கலாம்.. உறங்காம உச்சந்தலைய நக்குறாம்பளைய எங்கிட்டு எழுக்க.... உவ்வட ஆத்தானு சொல்லிட்டு நடுவீதியில நடக்கையில சொந்த மருவாதையும் மச்சுகொட்டி போயிபோச்சு.. மாமன் பாவம் பாத்து... வந்து மருவாத காக்க வாரசொன்னா... நீ நடிச்சுட்டு கிடக்க... போ.. நான் உசுர மாச்சுட்டு போனா பின்னதான் பொசுகிட்டு வருவ.. போறாம்ல... போறம்..'' என்று புலம்பலை கேட்டு சலித்துக்கொண்டே எழுந்தான் கருவட்டியாம்புள.
மாறுபக்கம் திரும்பி உக்காந்து உச்சஞ்செவுரு பாத்திருந்த சின்னதயிரியாளிடம்,
''ஆத்தாயி... ஏமே.. ஆத்தாயி.. இந்தா... எனக்கு இச்செய்யி விரும்பம் அக்குது ஆத்தாயி...'' என்று தலையை அரிச்சுக்கொண்டே சொன்ன மாத்திரத்தில அதிர்ச்சியில சின்னதயிரியாள் எழுந்து..
''குலத்த சீரயிழிக்க வந்தாயியா...?? மாருபோட அப்பனில்லனு மச்சியில சேரவுடாம.. என் சீலையாண்ட சொருகி வச்சனில்ல... பொட்டச்சியா வளந்துட்டியா...?'' என்று இடைவிடாது கோவத்துல பொங்கி எழுந்து புலம்பிகொண்டிருந்த சின்னதயிரியாளை தலைகுனிந்து கவனித்துகொண்டிருந்தான் கருவட்டி. பேச்சருத்து இருந்தவனின் அருகில் சென்று சின்னதயிரி,
''ஏலே.. இங்கிட்டு பாருயம்ல.. நீ சின்னதாம்ல இருக்கயில நான் ரவிக்கைய போடாம சீலை கட்டியப்புல அடிக்கடி நீ கேப்ப.. ஏன் அத்தாயி ரவிக்க போடலனு... இப்ப சொல்லுதாம்யா.. உவ்விட அப்பன் உன்னதாயிதான்.. தொழில சரியா செய்யாத போக எனை ரவிக்க போடாம வச்சுபுட்டாயிங்க.. கட்டுனவன் போனபின்ன ரவிக்கை போடகூடாதும்னு முல்லையாண்ட பேச்சுண்டு... அந்த அச்சுதாம்ல நம்மிடயும்.. தொழில சரிதாக்க செய்யலனா.. கட்டுனவன் இருந்தும் இருக்காதாப்புல தாம்ல.. அதாம்ல ரவிக்கைய லவகூட தொடாம போனேன்... என்னட ஆற்றாயி, அழுகாச்சி எம்மிட வர்ற மருமொவளுக்கு வேணாம்யா.. வேணாம்..'' என்று கண்ணோரமாய் கண்ணீர் கொப்பளித்து நிற்க.. அவள் கண்ணீரை துடைத்துகொண்டே கருவட்டியாம் பேச தொடங்கினான்.
''ஆத்தாயி... தப்பு ஆத்தாயி.. தப்பு.. நாம செய்யாண்டு கிடக்குதாம்ல.. எல்லாமே தப்பு ஆத்தாயி..''
''எதுயம்மே தப்பு.. இது மரவுய்யா.. இது மரவு.. நாம பாலைகாரவங்க... பாலையண்டா என்னா தெரியுதாம்யா... அங்கிட இங்கிட பிச்சுண்டு வாழுதாம்யா... நாம தமிழ்பாலையா.. மானமுடையாருங்க... ஆனா மானமுட்டு பிச்சுண்டு சாப்பிடுறோம்யா.. வேற தொழில் கிடையாதும்யா.. கிடையாது..''
''ஆத்தாயி... ஊரு செய்யட்டும் ஆத்தாயி.. நாம வேணாம்.. நாம இந்த பாலைய வுட்டு போயிடுவோம்...எங்கிடாச்சும்...'' என்று சொல்ல.. சின்னதயிரி கோபம் கொண்டு அவன் முதுகில் இரண்டு கொத்து கொத்தி.. முடியை வாரி இழுத்துக்கொண்டு...
''ஏலே.. உலகம் தெரிதாம்ல? உமக்கு உலகம் தெரிதா? எவ்வட ஊருல இருந்து எவ்விட ஊருக்கு போறது? மத்த வூரு காரியங்களா நீ முட்டுல நின்னா உம்மைய மடியில சேத்துகிடுவாயிங்கனு நினப்பா..?''
''தெரியிது ஆத்தாயி... நான் முல்லைக்கோ நெய்தலுக்கோ அழைக்கல ஆத்தாயி.. குறிஞ்சிபோவோம்... குறிஞ்சியில நம்மிட வாழ்க்கை வாழலாம் ஆத்தாயி.. குறிஞ்சியில சேத்துகிட வாய்ப்பிருக்கு.. வழியிட வந்தாரை குறிஞ்சி ஏத்துக்கும் ஆத்தாயி,,''
''என்னதாம்ல பேசுற... என்ன பேசுற... தெரியுதாம்ல.. தெரியுது.. அங்க சுனையாண்ட தவளையொன்னு மாருகெட்டு கவுந்துச்சு... இப்ப புரியுது சகுனம்.. நீயுதாம்ல அந்த கெட்டத கட்டி வந்த சகுனம்... பிறந்து வளர்ந்து சாதி சனம்... எப்படியாம்ல வுட்டு போறது.. மாருதட்டி சாஞ்சிடுவன்யா.. மேல பேசாத..''
''என்ன ஆத்தாயி.. வாயிவிட்டாலே மாச்சுக்குறேன்னு தான் பேச்சா... போறேன் ஆத்தாயி.. போயி மாமனான்ட தொழில பழகுறன்.. பின்ன நான் களவாண்டு வாரதெல்லாம் கவட்டையில வச்சு கொழுத்துக்க.. போறேன்.. போறேன்...'' என்று கோவத்துல கொப்பளிச்சுண்டே தரையில இருந்த துணிய இடுப்புல கட்டிகிட்டு ரவ உணவில்லாம மாமன தேடி போயிட்டாம்புள...!
(தொடரும்)
--
ஷோ.ரா
தூங்குவது போல பாசாங்கு செய்து கொண்டிருந்த கருவட்டியாம்பளையை தட்டி எழும்ப செய்ய முயற்சித்து கொண்டிருந்தாள் சின்னதயிரியாள்.
''உறங்கிப்புட்டவன எழுக்கலாம்.. உறங்காம உச்சந்தலைய நக்குறாம்பளைய எங்கிட்டு எழுக்க.... உவ்வட ஆத்தானு சொல்லிட்டு நடுவீதியில நடக்கையில சொந்த மருவாதையும் மச்சுகொட்டி போயிபோச்சு.. மாமன் பாவம் பாத்து... வந்து மருவாத காக்க வாரசொன்னா... நீ நடிச்சுட்டு கிடக்க... போ.. நான் உசுர மாச்சுட்டு போனா பின்னதான் பொசுகிட்டு வருவ.. போறாம்ல... போறம்..'' என்று புலம்பலை கேட்டு சலித்துக்கொண்டே எழுந்தான் கருவட்டியாம்புள.
மாறுபக்கம் திரும்பி உக்காந்து உச்சஞ்செவுரு பாத்திருந்த சின்னதயிரியாளிடம்,
''ஆத்தாயி... ஏமே.. ஆத்தாயி.. இந்தா... எனக்கு இச்செய்யி விரும்பம் அக்குது ஆத்தாயி...'' என்று தலையை அரிச்சுக்கொண்டே சொன்ன மாத்திரத்தில அதிர்ச்சியில சின்னதயிரியாள் எழுந்து..
''குலத்த சீரயிழிக்க வந்தாயியா...?? மாருபோட அப்பனில்லனு மச்சியில சேரவுடாம.. என் சீலையாண்ட சொருகி வச்சனில்ல... பொட்டச்சியா வளந்துட்டியா...?'' என்று இடைவிடாது கோவத்துல பொங்கி எழுந்து புலம்பிகொண்டிருந்த சின்னதயிரியாளை தலைகுனிந்து கவனித்துகொண்டிருந்தான் கருவட்டி. பேச்சருத்து இருந்தவனின் அருகில் சென்று சின்னதயிரி,
''ஏலே.. இங்கிட்டு பாருயம்ல.. நீ சின்னதாம்ல இருக்கயில நான் ரவிக்கைய போடாம சீலை கட்டியப்புல அடிக்கடி நீ கேப்ப.. ஏன் அத்தாயி ரவிக்க போடலனு... இப்ப சொல்லுதாம்யா.. உவ்விட அப்பன் உன்னதாயிதான்.. தொழில சரியா செய்யாத போக எனை ரவிக்க போடாம வச்சுபுட்டாயிங்க.. கட்டுனவன் போனபின்ன ரவிக்கை போடகூடாதும்னு முல்லையாண்ட பேச்சுண்டு... அந்த அச்சுதாம்ல நம்மிடயும்.. தொழில சரிதாக்க செய்யலனா.. கட்டுனவன் இருந்தும் இருக்காதாப்புல தாம்ல.. அதாம்ல ரவிக்கைய லவகூட தொடாம போனேன்... என்னட ஆற்றாயி, அழுகாச்சி எம்மிட வர்ற மருமொவளுக்கு வேணாம்யா.. வேணாம்..'' என்று கண்ணோரமாய் கண்ணீர் கொப்பளித்து நிற்க.. அவள் கண்ணீரை துடைத்துகொண்டே கருவட்டியாம் பேச தொடங்கினான்.
''ஆத்தாயி... தப்பு ஆத்தாயி.. தப்பு.. நாம செய்யாண்டு கிடக்குதாம்ல.. எல்லாமே தப்பு ஆத்தாயி..''
''எதுயம்மே தப்பு.. இது மரவுய்யா.. இது மரவு.. நாம பாலைகாரவங்க... பாலையண்டா என்னா தெரியுதாம்யா... அங்கிட இங்கிட பிச்சுண்டு வாழுதாம்யா... நாம தமிழ்பாலையா.. மானமுடையாருங்க... ஆனா மானமுட்டு பிச்சுண்டு சாப்பிடுறோம்யா.. வேற தொழில் கிடையாதும்யா.. கிடையாது..''
''ஆத்தாயி... ஊரு செய்யட்டும் ஆத்தாயி.. நாம வேணாம்.. நாம இந்த பாலைய வுட்டு போயிடுவோம்...எங்கிடாச்சும்...'' என்று சொல்ல.. சின்னதயிரி கோபம் கொண்டு அவன் முதுகில் இரண்டு கொத்து கொத்தி.. முடியை வாரி இழுத்துக்கொண்டு...
''ஏலே.. உலகம் தெரிதாம்ல? உமக்கு உலகம் தெரிதா? எவ்வட ஊருல இருந்து எவ்விட ஊருக்கு போறது? மத்த வூரு காரியங்களா நீ முட்டுல நின்னா உம்மைய மடியில சேத்துகிடுவாயிங்கனு நினப்பா..?''
''தெரியிது ஆத்தாயி... நான் முல்லைக்கோ நெய்தலுக்கோ அழைக்கல ஆத்தாயி.. குறிஞ்சிபோவோம்... குறிஞ்சியில நம்மிட வாழ்க்கை வாழலாம் ஆத்தாயி.. குறிஞ்சியில சேத்துகிட வாய்ப்பிருக்கு.. வழியிட வந்தாரை குறிஞ்சி ஏத்துக்கும் ஆத்தாயி,,''
''என்னதாம்ல பேசுற... என்ன பேசுற... தெரியுதாம்ல.. தெரியுது.. அங்க சுனையாண்ட தவளையொன்னு மாருகெட்டு கவுந்துச்சு... இப்ப புரியுது சகுனம்.. நீயுதாம்ல அந்த கெட்டத கட்டி வந்த சகுனம்... பிறந்து வளர்ந்து சாதி சனம்... எப்படியாம்ல வுட்டு போறது.. மாருதட்டி சாஞ்சிடுவன்யா.. மேல பேசாத..''
''என்ன ஆத்தாயி.. வாயிவிட்டாலே மாச்சுக்குறேன்னு தான் பேச்சா... போறேன் ஆத்தாயி.. போயி மாமனான்ட தொழில பழகுறன்.. பின்ன நான் களவாண்டு வாரதெல்லாம் கவட்டையில வச்சு கொழுத்துக்க.. போறேன்.. போறேன்...'' என்று கோவத்துல கொப்பளிச்சுண்டே தரையில இருந்த துணிய இடுப்புல கட்டிகிட்டு ரவ உணவில்லாம மாமன தேடி போயிட்டாம்புள...!
(தொடரும்)
--
ஷோ.ரா


