Saturday, 5 May 2012

விட்டத்த பாத்ததுல வந்த சிந்தனை..!

உங்க பாதை என்னைக்குமே தவறா போகாதுனு நெனச்சுட்டு இருக்குற கனவான்களே..! உங்க செயல் என்னைக்குமே சரியானது தான்னு நினைக்கிற நல்லவங்களே! அடுத்தவர்களை நொட்டம் சொல்லும் உத்தமர்களே..!என்ன யோசிக்கிறீங்க..? இந்த மாதிரி மனிதர்கள் எங்க இருக்காங்கனு கேக்குறீங்களா.? அட அது நீங்க தாங்க.


இந்த மாதிரி ஆட்கள் எங்க அதிகமா இருக்காங்கனு தெரிஞ்சுக்கணுமா.? உங்க பக்கத்துல கொஞ்சம் இடமும் வலமும் புறமும் திரும்பி பாருங்க எல்லாம் அவுங்களா தான் இருப்பாங்க.

நான் இந்தமாதிரி ஆட்கள எங்க பாத்தேன்னு தெரிஞ்சுகிணமோ...! சொல்றேன்.. சொல்றேன்...! காலையில டிரெயின்ல போகும் போது செங்கல்பட்டுல ஏறி தாம்பரத்தல ஏறுர ஆளுக்கு இடம் புடிச்சுட்டு வர்ற பெரியவரு, குட்டி சுவத்துல உக்காந்துட்டு பொண்ணுங்க இல்லாத சமயத்துல உலக அரசியல் பேசுற சிறுசுங்க இப்படி நான் எங்க போனாலும் இது மாதிரி ஆட்கள் மட்டும் தான் தெரியுறாங்க. இது என்னோட தப்பா.. இல்ல உண்மையிலே அவுங்க மேல தான் தப்பானு பல சமயம் நான் குப்புற படுத்து யோசிச்சிருக்கேன். ஒரு வேலை நிமிர்ந்து படுத்து யோசிச்சுருந்தா கரெக்டா யோசிச்சிருப்பனானு தெரில. ஆனா குப்புற படுத்ததுல தூக்கம் மட்டும் தான் வந்துச்சு சிந்தனை வரல.

அப்படி என்ன தாங்க பண்ணுறாங்க.. முட்டி மோதிகிட்டு டிரெயின்ல நின்னுகிட்டு இருப்போம். பக்கத்துல ஒரு சீட் காலியாகும். உக்காரலாம்னு கால நகர்த்துவோம்... எட்டிகிட்டு முட்டிகிட்டு ஒருத்தரு வந்து நம்மல தள்ளி விட்டுட்டு இம்சை பண்ணுவாரு பாருங்க. அட பாவம்.. என்ன அவசரமோ ஏதோன்னு பிடறி தட்ட, நாம தலை காலு புரியாம தெரிச்சு நிக்கும்போது அந்த சீட்ல ஒய்யாரமா இடம் புடிச்சு உக்காருவாரு. ஏன்யா இந்த சீட்ட புடிக்கவாயா என் நேரா இருந்த வாயா ஓரமா ஒதுக்கி வக்கிற போல குத்துன்னு கேக்க தோணும். ஆனா நாங்கலாம் படிச்ச நாகரீகம் தெரிஞ்ச ஆளுங்கல. எப்படி கேபபோம்.. வாய மூடிகிட்டு கீழ விழுந்தாலும் முட்டிக்காலு கீழ படாத மாதிரி பில்டப் கொடுத்துட்டு நிப்போம்ல. பாவம் நாம கத்த போயி மடங்குற ஏதோ ஒரு பொண்ணும் மடங்காம போயிட்டா என்ன பண்றது.

இப்படி இருக்குறதுக்கு பெயரு நாகரீகம். எதிருல ஒருத்தன் உக்காந்தா சிலருங்க என்னா செய்வானுங்க. பேசுவாய்ங்க.. ''அட... உலகத்துல.. எவனுக்கு தான் பொருப்பு இருக்கு.. எவன் தான் சரியா நடந்துக்கிறாங்க. அரசியல்வாதிகள மாத்துனா சரியா போயிடும்னு'' பேசிகிட்டே ரெண்டு பேருக்கு நடுவுல கொஞ்சம் கீழ குனிஞ்சு எச்சில துப்பிட்டு திரும்ப குத்தம் சொல்லுற வேலைய பாக்க ஆரம்பிப்பாய்ங்க.

அட என்னதான் யா நடக்குது இங்க.. அவனே ஒழுங்கா இல்லையே..! அப்பரம் எதுக்கு அரசியல்வாதிய குறை சொல்றான்னு நீங்க கேக்குறது புரியிது. இப்ப நான் கேக்குறன்.. நீங்க ஒழுங்கா இருக்கீங்களா.. அவன எதுக்கு நீங்க குறை சொல்றீங்க. சரி.. நான் ஒழுங்கா இருக்கேனா..? நான் ஏன் உங்கள குறை சொல்லுறேன்...!? அட போங்கப்பா.. எ்னக்கு குறை மட்டும் தானே சொல்ல தெரியும். .. .. சிரிக்காதீங்கப்பா.. நீங்க மட்டும் ஒழுங்கா.? உங்களுக்கும் குறை மட்டும் தானே சொல்ல தெரியும்.

இன்னொரு சாரர் சிறுசுங்க இ்ருக்காங்க. வீட்டுக்கு நடந்து போகும் போதெல்லாம் பாப்பேன். அந்த குட்டி செவுத்துல உக்காந்துகிட்டு. இந்த அரசியல்வாதிகளே இப்படி தான் பான்னு சொல்லி ரொம்ப கொதிச்சு போயிருப்பாங்க. அவுங்க மொகத்துல ஒரு வெறி தெரியும். அந்த வெறி என்னன்னு கேக்குறீங்களா..? பார்ல சரக்கு வெலையெல்லாம் ஏத்துறாங்களாம்... பொண்ணுங்களுக்காக தனி டிரெயின் உடுறாங்களாம்... டே.. டே.. டே... எதிர்காலம் எவ்வளவு ப்ரைட்டா தெரியுது பாருடா எனக்கு...! ரொம்ப சந்தோசமா இருக்குடா யப்பா. அவுங்க பேசினதெல்லாம் எனக்கு எப்படி தெரியும்னு கேக்கறீங்களா.. ஒட்டு கேட்டேங்க. யாரு.. யாரு.. யாரு அங்க குதிக்கிறது. தம்பி.. நான் யோக்கியன் இல்லீங்க. நான் உத்தமன் இல்லீங்க.

டே.. ஓவரா போகுது.. இப்ப என்னதான் சொல்ல வர்றன்னு கேக்குறீங்களா..!!? அதாங்க.. எனக்கும் தெரியல. ஏதோ சொல்ல வர்றேன்னாச்சும் உங்களுக்கு புரிஞ்சுருக்கே. எனக்கு அதுவே தெரியலங்க. லூசுடா இவன்னு சொல்லுறது யாருங்க.. அப்படியா.. நான் லூசாகிட்டனா.. அய்யா ஜாலி.. ஜாலி.. உங்க கூடல்லாம் குப்பைய கொட்டுறதுக்கு மனம் நலம் பாதிக்கப்பட்டு எதுவுமே தெரியாம இருக்குறதே பெட்டரு. யப்பா...!

--
ஷோ.ரா.

1 comment:

தமிழ்வாசி பிரகாஷ் said...

ரொம்ப பலமான அடியோ?
சிந்தனை அப்படி பதிவுல கொட்டிக் கிடக்கு