Friday, 11 May 2012

மனைவி

என் உயிருக்கு உயிரானவள். என்னை என் வாழ்வை இருபது வயதில் இருந்து செதில் செதிலாய் செதுக்கி எனை உருவகம் படுத்தியவள். என் வாழ்வை அலங்கரிக்க வந்த தேவதை. எத்தனையோ உயிரற்ற,ஒரு உருவகம் செய்ய முடியாதொரு சூழலில் கூட அவளது குழந்தை போன்ற முகத்தினை பார்த்தால் ஒரு நிமிடம் உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை குளிர்ந்து எந்தவகையான சூழலையும் சமாளிக்கும் தைரியம் பிறந்துவிடும்.


இன்னும் நினைவுகளில்... அன்று அவளிடம்.. அவளது வீட்டில் உள்ளே நுழைய முடியாமல் இருந்த போது.. எல்லோரையும் முட்டிக்கொண்டு உள்ளே சென்று அந்த இருக்கையில் அமர்ந்துகொண்டு.. அவளது கோபகார அப்பாவை பார்த்து நான் ஒரு வித தைரியத்தோடு.. உங்கள் மகளை எனக்கு தாருங்கள்.. நான் காப்பாற்றுவேன்.. அவள் தான் எனக்கு உயிர்.. என்று நான் பேச பேச.. உள்ளே நாணம் கொண்டு பயந்துகொண்டிருந்த என் தேவதை கொஞ்சம் கொஞ்சமாக தலையை நீட்டி பயம் தெளிந்து எனது பேச்சின் முடிவே ஓடி வந்து என் கையை இருக பற்றிக்கொண்டாள்.

என் குழந்தை தேவதைக்கு எங்கிருந்து அவ்வளவு தைரியம் வந்தது. அவள் அப்படிபட்டவள் இல்லையே...! எங்கிருந்து அப்படியொரு பூச்சரமாய் என்னை கைபற்றி கொண்டாள். ஒரு நிமிடம் பிரமித்து என் கையை இறுக பற்றியிருந்த அவள் கையூடே சேர்ந்த முகத்தை பார்த்தேன். என்ன ஒரு ரம்மியமான முகம். என்றும் இல்லாமல் அன்று கொஞ்சம் கூடுதல் அழகாய் என் தேவதை.

ஒரு மிடுக்கு. கொஞ்சமாக இருந்த தைரியம் பீறிட்டு சிதறி அதிகமாக உருவெடுத்தது. தோளை உயர்த்திக்கொண்டு அவளது தந்தையை நோக்கி கேட்டேன், ''என் மனைவியை எனக்கு தருவீர்களா என்று...''. அதிகம் கோபம் கொள்ளும் என்னை அவளது குடும்பத்தார் உசுப்பிவிட மறக்கவில்லை. அதீத வார்த்தைகளில் ஏச்சுகள். அந்த ஏச்சு எதுவும் என் காதில் விழவில்லை. அந்த ஓரத்தில் பதறி நின்றிருந்த என் சின்ன தேவதை முக பாவனைகள் முன்னிலையில் அது ஒன்றும் மெய்யில்லா பொம்மை சத்தமாகவே என் காதில் பாய்ந்தது.

அவளை தவிர என்ன வேண்டும். அவள் மட்டும் போதுமே...! என்ற எண்ணம் எங்கிருந்து வந்ததோ..! அவளே எல்லாமுமாய் ஆகி.. இன்று அவளே என்னவளுமாய்... என்றென்றும் என்னவளாய்...!

இன்னும் வேறென்ன வேண்டும் என்று அன்று திருமண பந்தலில் அவள் கையை இறுக பற்றிக்கொண்டு நான் நடந்த நடையில் என் கையை பிடித்துக்கொண்டு முன்னே பார்க்காமல் என்னை மட்டும் பார்த்துகொண்டு என்னை நம்பி நான் சரியாக வழிநடத்துவேன் என்று நம்பி அன்று மண்டபத்தை விட்டு வெளியே வந்த என் தேவதை இன்று வரை இன்னும் என் வாழ்க்கையில் என்னை நம்பியே என் கையை பிடித்தே வந்துகொண்டிருக்கிறாள்.

என்னையே எல்லாவற்றிர்க்கும் சார்ந்து இருக்கிறாயே...! நான் ஒரு நாளில் இல்லையென்றால் நீ என்ன செய்வாய்... எல்லாவற்றையும் நீயும் கற்றுக்கொள் என்று சொல்கையில்.. ''போடா... நீ இல்லையென்ற ஒரு நொடி முன்பு நான் இல்லையென ஆகிவிடும்...'' என்று செல்லமாக சொல்லிவிட்டு என் கையை தோளில் சாய்ந்துகொண்டாளே...!

நமது பிள்ளைகாக நீ இருக்க வேண்டுமே என்றேன்.. அப்போது அவள் சொன்னது ஒரு தாயாக யாரும் சொல்லிட மறுப்பது. எனக்கு பிள்ளை முக்கியமில்லை. அவனுக்கு ஒரு தாயாக நான் செய்ய வேண்டியதற்கு உங்களிடம் இருந்து கற்பதற்கு ஒன்றுமில்லை.... ஒரு தாயாக அவனுக்கு செய்ய வேண்டியதை செய்துவிட்டு நான் உங்களுடனே வந்திடுவேன்... ஒரு தாய் அவனுக்கு தேவைபடுவது 5 வயது வரை தான் என்றாள். இல்லை..........! அப்படி ஒருபோதும் இல்லை. இது அவளுக்கும் தெரியும். ஆனால் என் மீது அவள் வைத்திருந்த பாசத்தை எப்படி சொல்வது.? தமிழிலோ அல்லது ஏதாவது ஒரு ஒட்டுமொத்த மொழியிலோ அதற்கு ஈடான வார்த்தையை சொல்ல முடியுமா? முடியாது. ஒரு போதும் முடியாது என்பதை அடித்து சொல்வேன்.

காதலித்த போதும் சரி.. திருமணத்துக்கு பிறகும் சரி..! எத்தனையோ சமயங்களில் என்னவள் பொருத்து போக எனது அவசர கோபம் அவளை கண்டபடி பேசிவிடும். அதற்கு நான் கோபத்தின் மீது பழி போட விரும்பவில்லை. நானே...! நானே காரணமாகினேன். திருமணம் ஆன முதல் தாய் வீடு தந்தை வீடு என்று சொல்லிகூட ஒரு நாளேனும் அவளை பிரிந்தது இல்லை. வருடங்கள் கடந்த ஒரு நாள் அவளது தாய் வீட்டிற்கு அவசர காரியமாக ஒரு வாரம் சென்றாள். அவளோடு என்னால் போக முடியாத சூழல்.

அப்போது புரிந்தது. அப்போது தெளிவாக புரிந்தது. நான் இல்லாமல் அவளால் தனியாக செயல்பட முடியாது என்றிருந்தேன். அது தவறு...! அவள் அவளாக இல்லாமலே என்னை இத்தனை நாளாக ஆட்டுவித்திருக்கிறாள் என்பதை உணர்ந்தேன். நான் தான் முற்றிலுமாக அவளை நம்பி இருக்கின்றேன். அவள் அல்லாது ஒரு வாழ்வை என்னால் நினைத்து கூட பார்த்திட முடியாது, அவளை திட்டுதலோ, அவள் மீது கோபம் கொள்ளுதலோ கூடாது என்று முடிவெடுத்தேன். என் தேவதை அவளை ரசிக்க ஆரம்பித்தேன். அவள் தவறிழைக்கும் போது கூட ரசிக்க ஆரம்பித்தேன். என்ன ஒரு அழகு அவள்...! எனக்காகவே என்னை தேடி வந்தாலோ..!!?

திருமணத்தின் போது ரச்சு பொருத்தம் இல்லை... அந்த பொருத்தம் இல்லை.. அன்னோன்யம் இருக்காது.. குழந்தை பேறு இருக்காது என்று என்னென்னவோ நடந்த்தே... அதெல்லாம் எனக்கு இப்போது எங்களை பிரிக்க செய்த மாய சதி போல தான் கண்ணில் தெரிகிறது. இன்னும் என்ன சாதிக்க இல்லை..!? அவளுக்காக இன்னும் என்ன என்னவோ சாதிக்க இருக்கிறது.

அவள் இல்லாமல் நானில்லை என்பதை உணர்ந்து வருடங்கள் கடந்தன. நேற்று முன்தினம் 9ம் தேதி அவளுக்கு பிறந்தநாள். என் தேவதைக்கு வாயால் மட்டுமல்லாது உணர்வாகவும் உன்னதமாகவும் பிறந்தநாள் வாழ்த்தை பதிவு செய்தேன். இப்பொழுது எழுத்திலும்...!

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கண்மணியே............!

--
ஷோ.ரா.

2 comments:

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

எங்க தளத்திற்கும் நீங்க வாங்க,தளத்தில் உறுபினராக ஆகுங்கள் www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில்.காமகொடுரனுக்கு தண்டனை தந்த பெண் பதில் இங்கே,கேள்வி எங்கே-விவாதம் இறைமறுப்பாளர் தருமிக்கு,நபிகள் நாயகம் அவர்களின் குணநலன் அறிய, நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி-1 TO 15),,இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி,ஆக்கபூர்வமான இன்னும் பல கட்டுரைகள்.அந்த தளத்தில் இணையுங்கள்,வாருங்கள் உங்கள் கருத்தை உலகறிய தெரிவியுங்கள் ,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....

ராஜி said...

உண்மை காதல் சொட்டுது உங்க பதிவில். நல்லதொரு பகிர்வு. பிறந்த நாளுக்கு நானும் உங்க கண்மணியை வாழ்த்திக்குறேன்.